RCB vs KKR | பெங்களூருவை பந்தாடிய நரைன், வெங்கடேஷ் ஐயர்: கொல்கத்தாவுக்கு 2-வது வெற்றி
பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 10-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இதன் மூலம் நடப்பு சீசனில் சொந்த மைதானத்தில் (ஹோம் கிரவுண்ட்) நடைபெற்ற போட்டியில் தோல்வியை தழுவிய முதல் அணியாக ஆர்சிபி உள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஒன்பது போட்டிகளிலும் சொந்த மைதானத்தில் விளையாடி அணிகள் வெற்றி பெற்றிருந்தது.
பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


