லக்னோ–ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை @ ஐபிஎல் 2024

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்–லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகமானது. பங்கேற்றுள்ள இரு சீசன்களிலும் 3-வது இடத்துடன் தொடரை நிறைவு செய்த லக்னோஅணி இம்முறையும் உயர்மட்டசெயல்திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும். இன்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல் மீது அனைவரது கவனமும் திரும்பக்கூடும். ஏனெனில் அவர், தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் விலகியிருந்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.