பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இன்று பலப்பரீட்சை: களத்துக்கு திரும்புகிறார் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்

சண்டிகர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் முலான்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகாராஜா யாதவீந்திர சிங் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

அதிரடி பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர், பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கு பின்னர் தற்போது முழு உடற்தகுதியுடன் கிரிக்கெட் களத்துக்கு திரும்பி உள்ளார். 14 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் கேப்டனாக களமிறங்க உள்ள அவர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த சீசனில் டெல்லி அணி அணி 10வது இடத்தை பிடித்திருந்தது. தற்போது ரிஷப் பந்த் வருகையால் அணியின் செயல் திறன் மேம்படக்கூடும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.