தோனி உடனான மாலை நேர சந்திப்பு - சிஎஸ்கே கேப்டன்சியை முன்பே தெரிந்து வைத்திருந்தாரா ருதுராஜ்?

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் கோப்பை அறிமுக விழாவில் சென்னை அணி சார்பில் தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கலந்துகொண்ட நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் தோனிக்குப் பிறகு கேப்டன்சி தனக்குத்தான் என்பது ஓரளவுக்கு ருதுராஜுக்கு முன்கூட்டியே தெரிதிருந்தது.

வியாழக்கிழமை காலை உணவின் போது தோனி இந்த முறை தான் கேப்டன் இல்லை. ருதுராஜ் தான் கேப்டன்சி என்ற செய்தியை உடைத்து வீரர்களுக்கு அதிர்ச்சியளித்ததாகவும் பிறகு சிஎஸ்கே நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியதாகவும் சில பல தகவல்கள் தெரிவிக்கின்றன. தொலைபேசியிலேயே ருதுராஜை கேப்டனாக்கவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.