“ரஞ்சி கோப்பை சம்பளத்தை விட டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் அதிக வருவாய்” - சுனில் கவாஸ்கர் விமர்சனம்
"ரஞ்சி டிராபி கிரிக்கெட்டை நோக்கி இளம் வீரர்களை ஈர்க்க வேண்டுமெனில் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும். ஒப்பந்த முறை கொண்டு வரப்பட வேண்டும். ஊக்கத்தொகை அறிவிக்கப்பட வேண்டும்" என்று முன்னாள் இந்திய நட்சத்திரம் சுனில் கவாஸ்கர் பிசிசிஐ நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் "உள்நாட்டுக் கிரிக்கெட்டிற்கென்று தனியான ஒப்பந்த முறை தேவை. அப்போதுதான் வீரர்களுக்கு நிதிப் பாதுகாப்பு இருக்கும். அதனால் அவர்கள் ரஞ்சி போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆடுவார்கள். இப்போதிருக்கும் சம்பள அமைப்பில் ரஞ்சி டிராபியை விளையாடாமல் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதை வீரர்கள் விரும்புவதை நாம் தவறென்று கூற முடியாது" என்கிறார் சுனில் கவாஸ்கர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
