‘சிறந்த தலைமை பண்பை கொண்டவர் ரோகித்’ - இக்கட்டான சூழலில் உதவியது குறித்து அஸ்வின் நெகிழ்ச்சி

பெங்களூரு: கடந்த பிப்ரவரி 16-ம் தேதி இரவு இங்கிலாந்து அணிக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி, சென்னை திரும்பி இருந்தார் அஸ்வின். அவரது தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அந்த இக்கட்டான தருணத்தில் தனக்கு அணியின் கேப்டன் ரோகித் சர்மா, உதவியது குறித்து இப்போது அஸ்வின் நினைவுகூர்ந்துள்ளார்.

“நான் அம்மாவை பார்த்து விட்டு வரலாம் என நினைத்திருந்தேன். மருத்துவர்கள் அவரை பார்க்க முடியாத என சொல்லி இருந்தார்கள். என்னால் அதை தாங்க முடியவில்லை. கலங்கி நின்றேன். சென்னை திரும்ப விமான டிக்கெட் புக் செய்ய முயன்றேன். ஆனால், ராஜ்கோட்டில் மாலை 6 மணிக்கு மேல் விமானம் ஏதும் இல்லை என தெரிந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.