“தோனி ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியில் ரோகித்” - அம்பதி ராயுடு விருப்பம்
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்று முன்னாள் வீரர் அம்பதி ராயுடு விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அம்பதி ராயுடு அளித்த பேட்டியில், "மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த ஆண்டும் ரோகித் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும். ஒரு வருடம் கழித்து ஹர்திக் பாண்டியாவிடம் கேப்டன்சியை ஒப்படைத்திருக்கலாம். ஏனென்றால், ரோகித் இன்னும் இந்திய டி20 அணியை வழிநடத்தி வருகிறார். ரோகித்தை மாற்றிவிட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பொறுப்பில் நியமித்ததில் மும்பை அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருக்கும் என நினைக்கிறேன்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
