இங்கிலாந்தின் பாஸ்பால் பூச்சாண்டியை துவம்சம் செய்த இந்திய அணி!
இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பு பாஸ்பால் அதிரடி காட்டிய இங்கிலாந்து, அதன்மூலம் உச்சத்துக்குச் செல்லும் என்று எதிர்பார்த்த நிலையில், கடைசியில் அடியாழமற்ற கிடுகிடு பள்ளத்தில் உருண்ட பேருந்து போல் ஆகிவிட்டது. சுருக்கமாகச் சொன்னால் பாஸ்பால் பல்லிளித்து விட்டது. இனி அவர்கள் பாஸ்பால் என்றால் ‘எப்படி இந்தியாவில் ஆடிய பாஸ்பால் போன்றா?’ என்று மற்றவர்கள் கிண்டலடிப்பார்கள்.
முதல் டெஸ்ட் போட்டி நடந்த ஹைதராபாத்தில் ஒரு டீசண்டான பிட்ச் அமைய இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து. ஜேம்ஸ் ஹார்ட்லி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சனை எடுத்திருந்தால் இன்னும் வசதியான வெற்றியைப் பெற்றிருக்கலாம். மார்க் உட்டுக்கு பிட்ச் செட் ஆகவில்லை. ஆலி போப் 278 பந்துகளில்தான் 196 ரன்களை எடுத்தார். பாஸ்பால் அதிரடியெல்லாம் காட்டவில்லை. மாறாக ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்வீப்களை அருமையாகப் பயன்படுத்தினார். உடனே ஆச்சாப் போச்சா, இந்தியாவில் இந்தியாவை வீழ்த்தும் கோல்டன் அணி இதுவாகவே இருக்கும் பென் ஸ்டோக்ஸ், மெக்கல்லம் பாஸ்பால் கூட்டணி இமாலய உச்சம் தொடும் என்றெல்லாம் ஆங்கிலேய ஊடகங்கள் மட்டற்ற உயர்வு நவிற்சி மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
