எம்ஆர்எஃப் பேஸ் அறக்கட்டளையில் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு

சென்னை: திறமையான இளம் வேகப்பந்து வீச்சாளர்களை கண்டறிவதற்காக எம்ஆர்எஃப் பேஸ் அறக்கட்டளை நாடு முழுவதும் ‘ஏஸ் ஆஃப் பேஸ்' நிகழ்வை நடத்தியது. கொல்கத்தா, மும்பை, டெல்லி, சென்னை ஆகிய 4 நகரங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளில் இருந்து தலா 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இறுதிக்கட்ட தேர்வு சென்னையில் நேற்று (9-ம் தேதி) நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் மாநிலம் கங்கா நகரைச் சேர்ந்த ஜஸ்கரன் சிங், பிஹார் மாநிலம் பிர்பூரைச் சேர்ந்த முகமது இசார், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த முகமது சர்ஃப்ராஜ் ஆகிய 3 பேர் இறுதியாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரும், எம்ஆர்எஃப் அறக்கட்டளையின் இயக்குநரும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான கிளென்மெக்ராத் மற்றும் தலைமை பயிற்சியாளர் எம்.செந்தில்நாதன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் எம்ஆர்எஃப் பேஸ் அறக்கட்டளையில் இலவசமாக பயிற்சிபெற அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.