முற்றிலுமாக சரணடையும் இங்கிலாந்து: இனி 2, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரே போதும்!

தரம்சாலா: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவிலும் சரி, இங்கிலாந்திலும் சரி 5 டெஸ்ட் போட்டிகளை நடத்துவது சுவாரஸ்ய குறைவை தோற்றுவிக்கிறது. இந்தியா அங்கு சென்றால் நன்றாக ஆடி வெல்ல முயற்சி செய்கின்றனர். ஆனால், இங்கிலாந்து இங்கு வந்தால் அப்படியே முற்றிலுமாக சரணடைந்து விடுகின்றனர்.

எந்த வித ஃபைட்டும் இல்லை, ஒன்றும் இல்லை. இத்தனைக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றனர். ஆனால் அதே உத்வேகத்தையும் ரிதத்தையும் மற்ற டெஸ்ட் போட்டிகளுக்கு அவர்களால் கடத்த முடியவில்லை. உடல் மொழி தொய்வாகி விடுகின்றது. இந்திய அணியா... வெல்லவே முடியாது என்ற முகபாவனையை அந்த வீரர்கள் காட்டத் தொடங்கி விடுகின்றனர். இது டெஸ்ட் தொடரை ஒருதலைப்பட்சமாக்கி பார்ப்பதற்கு மிகவும் சோர்வூட்டுவதாக உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.