ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் விதர்பா அணி

நாக்பூர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேச அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது விதர்பா அணி.

நாக்பூரில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் விதர்பா 170 ரன்களும், மத்திய பிரதேசம் 252 ரன்களும் எடுத்தன. 82 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய விதர்பா 101.3 ஓவர்களில் 402 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 141, அக் ஷய் வாட்கர் 77 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து 321 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மத்திய பிரதேச அணியானது 4-வது நாள் ஆட்டத்தில் 71 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 228ரன்கள் எடுத்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.