ரஞ்சி கோப்பை கிரிக்கெட் | தமிழக அணி 146 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த தமிழக அணி 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்தஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்ததமிழக அணி 42 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தவித்தது. சாய் சுதர்சன் 0, நாராயண் ஜெகதீசன் 4, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 8, கேப்டன் சாய் கிஷோர் 1, பாபா இந்திரஜித் 11 ரன்களில் நடையை கட்டினர். இதன் பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கருடன் இணைந்து நிதானமாக விளையாடினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

