துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் | கால் இறுதியில் போபண்ணா ஜோடி
துபாய்: துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
துபாயில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி முதல் சுற்றில் துனிசியாவின் ஸ்கந்தர் மன்சூரி, பாகிஸ்தானின் அய்சாம் உல் ஹக் குரேஷி ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒரு மணி நேரம் 41 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரோகன் போண்ணா, மேத்யூ எப்டன் ஜோடி 7-6(4) 7-6(5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

