“ரிஷப் பந்த் திரும்பி வந்தால் பழைய பன்னீர்செல்வமாக இருக்க மாட்டார்” - கவாஸ்கர் எச்சரிக்கை

மும்பை: இந்திய வீரர் ரிஷப் பந்த் விபத்தில் இருந்து உயிர் தப்பிய பிறகு அவர் அறுவை சிகிச்சை மற்றும் மறு வாழ்வுச் சிகிச்சை, உடற்பயிற்சி, பேட்டிங் பயிற்சி என்று தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. ரிஷப் 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவே தெரிகிறது.

ஆனால், சுனில் கவாஸ்கர் கூறுவது என்னவெனில், கம்பேக் கொடுப்பத்தில் ரிஷப் அவசரம் காட்டுவது நல்லதல்ல என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். டிசம்பர் 2022-ல், ரிஷப் பந்த் ஒரு பயங்கரமான கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டத்தால் உயிர் தப்பினார். இது அவரை விளையாட்டிலிருந்து நீண்ட காலம் விலக்கி வைத்தது. ஆனால் அவர் குணமடையும் கடைசி கட்டத்தில் இருக்கிறார். அவர் பயிற்சி வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். இப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் தங்கள் கேப்டனை வரவேற்க தயாராகி வரும் நிலையில் ரிஷப் பந்த் முழு உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே மீண்டும் விளையாடுவார் என்று கவாஸ்கர் கருதுகிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.