“ரகசியமாக அவனை கிரிக்கெட் ஆட அனுப்புவேன்” - ஆகாஷ் தீப் தாயார் உருக்கம்
ராஞ்சி: ராஞ்சியில் அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடிவரும் ஆகாஷ் தீப்பின் பயணம் கடினமானது. ஆகாஷ் தீப்பின் தாயார் லதுமா தேவி இல்லையெனில் ஆகாஷ் தீப் என்றொரு வேகப்பந்து வீச்சாளர் இன்று இந்திய அணிக்குக் கிடைத்திருக்க மாட்டார்.
ராஞ்சியில் முதல் நாள் ஃபிளாட் பிட்சில் இங்கிலாந்தின் முதல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார் ஆகாஷ். பந்துகள் மிகத்துல்லியமாக ஸ்விங் ஆனது. மணிக்கு 138-140 கிமீ வேகம் என்ற போதிய வேகம் கொண்டுள்ளார். அட்டகாசமான லெந்த், பந்தின் தையலை சரியாக நிலை நிறுத்துவது என்று ஆகாஷ் தீப்பின் சாதக அம்சங்கள் பாராட்டப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

