ராஞ்சி டெஸ்ட் நாள் 2 - ஜெய்ஸ்வால் மட்டுமே அபாரம்: சறுக்கிய இந்திய அணி 219/7

ராஞ்சி: ராஞ்சி டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இங்கிலாந்து தன் முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இந்திய அணி, இங்கிலாந்தின் அட்டகாசமான பந்து வீச்சினால் ஆட்ட முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. விக்கெட் கீப்பர் ஜூரெல் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 30 ரன்களுடனும், குல்திப் யாதவ் 17 ரன்களுடனும் கொஞ்சம் சேத தடுப்பு ஆட்டம் ஆடிவருகின்றனர். இருவரும் நாளை 3-ம் நாளில் தொடர்வார்கள்.

ஆட்டக்களம் பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக இருந்ததே தவிர நன்றாக இருக்கும் போல் தெரிகிறது என்று நாம் சிந்திக்கும் போதே பந்துகள் கணுக்காலுக்குக் கீழ் சீறும் தன்மையை வெளிப்படுத்தியது. அதற்கு நேற்று பென் ஸ்டோக்ஸ் இரை, இன்று அஸ்வின் இரை. இங்கிலாந்து தரப்பில் உயரமான ஆஃப் ஸ்பின்னர் ஷோயப் பஷீர் பிட்சின் உதவியுடன் நல்ல அபாரமான லெந்தில் வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பை உடைத்தார். மற்றொரு இளம் ஸ்பின்னர் டாம் ஹார்ட்லி 2 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.