பிசிசிஐ உத்தரவை மீறிய இஷான் கிஷன் - ஒப்பந்தம் ரத்தாகும் அபாயமா?

இஷான் கிஷனுக்கும் பிசிசிஐ-க்கும் இடையே என்னவிதமான கருத்து மோதல் என்பது வெளிப்படையாக இதுவரை வெளியிடப்படவில்லை. இப்பொதெல்லாம் பிரஸ் மீட் என்றால் என்னவென்று கேட்காத குறைதான் பிசிசிஐ நிர்வாகமும், அணித் தேர்வுக் குழுவும். ஏனென்றால் பத்திரிகைகளிடம் எதையும் இவர்கள் தெரிவிப்பதில்லை. அதனால்தான் பத்திரிகைகள் சாதாரண கிரிக்கெட் அணித் தேர்வு குறித்த தகவல்களை கூட ஏதோ புலனாய்வு செய்து கண்டுபிடிக்கும் நிலைக்குச் சென்று விட்டன.

ஜார்க்கண்ட் அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் விக்கெட் கீப்பர் - பேட்டர் இஷான் கிஷன் வெள்ளிக்கிழமை தொடங்கிய இறுதிச் சுற்று ஆட்டங்களைத் தவிர்த்துவிட்டதால், ரஞ்சி டிராபியை இஷான் கிஷன் தொடர்ந்து புறக்கணிக்கிறார் என்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இஷான் கிஷன், தீபக் சஹார், ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோரை பிசிசிஐ உள்நாட்டு கிரிக்கெட் ஆட வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதில் ஸ்ரேயஸ் அய்யர் முதுகு வலி காரணமாக ஆடமுடியவில்லை என்று ஏற்கெனவே செய்திகள் வெளியாகிய நிலையில், ஏன் தீபக் சஹார், இஷான் கிஷன் ஆடவில்லை என்று இப்போது கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.