“திருமணமான 3 மாதத்தில் பிரச்சினை” - தந்தையின் குற்றச்சாட்டும், ரவீந்திர ஜடேஜா பதிலும்

ஜாம்நகர்: இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா நடப்பு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் பங்கேற்றார். பின்னர், காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் பங்கேற்கவில்லை. அடுத்த மூன்று போட்டிகளில் உடற்தகுதியை ஜடேஜா அணியில் இடம்பிடிப்பார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வரும் ஜடேஜா, தற்போது குடும்ப பிரச்சினைகளில் சிக்கி தவித்து வருகிறார் என்றால் மிகையல்ல. ஜடேஜாவின் தந்தை அனிருத் சிங் சமீபத்தில் அளித்த பேட்டி அவரின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஜடேஜாவின் தந்தை அனிருத் சிங் குஜராத் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி: “நான் உங்களுக்கு ஓர் உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். ஜடேஜா மற்றும் அவரது மனைவி ரிவாபாவுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் தற்போது எந்தவித தொடர்பும் இல்லை. நாங்கள் அவர்கள் இருவரையும் தொடர்புகொள்வதில்லை. அவர்களும் எங்களை தொடர்புகொள்வதில்லை. நான் தற்போது ஜாம்நகரில் தனியாக வசிக்கிறேன். ஜடேஜாவும் இதே ஊரில்தான் தன்னுடைய பங்களாவில் வசிக்கிறார். ஆனால், இதுநாள் வரை ஜடேஜாவை இந்த நகரத்தில் பார்க்கவில்லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.