குடும்ப பாரமும் உழைப்பின் பலனும் - இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வான ஆகாஷ் தீப் யார்?

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் விராட் கோலி இல்லை என்பது பெரும் பின்னடைவு. அதோடு ஸ்ரேயஸ் அய்யரும் இல்லை என்பது கூடுதல் பின்னடைவு. இந்தப் பின்னடைவுகளுக்கு மத்தியில் ஆகாஷ் தீப் என்ற பிஹாரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தரும் விஷயமாக உள்ளது.

பிஹாரைச் சேர்ந்தவர் என்றாலும் பெங்கால் அணிக்கு ஆடியதன் மூலமே ஆகாஷ் தீப்புக்கு வாய்ப்புகள் வரப்பெற்றன. இவருக்கு வயது 27. 2019-ம் ஆண்டிலிருந்து இவர் பெங்காலுக்கு ஆடிவருகிறார். இவரது ஐபிஎல் அணி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகும். இவர் கேரளாவுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் ஆடிக் கொண்டிருந்த போது ஓய்வறையில் வீரர்கள் கரகோஷம் செய்தது இவருக்கு முதலில் புரியவில்லை. பிறகு தான் இவர் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்ட விவரம் இவருக்கே தெரியவந்தது. பெங்கால் அணிக்காகவும் இந்தியா ஏ அணிக்காகவும் பல நல்ல பந்து வீச்சினை செய்துள்ளார் ஆகாஷ் தீப்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.