2-வது குழந்தை குறித்த தகவல்: விராட் கோலி குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோரிய டி வில்லியர்ஸ்
புதுடெல்லி: விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகியுள்ளனர் என்று சில தினங்களுக்கு முன்பு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கூறியிருந்த நிலையில், உறுதிப்படுத்தப்படாத தகவலை தெரிவித்ததற்காக விராட் கோலி குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோருவதாக தற்போது அவர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் அண்மையில் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட ஒரு காணொலியில், விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகியுள்ளனர் என்று கூறியிருந்தார். பின்னர் மறுநாள் மற்றொரு காணொலியில் இந்த தகவலை அவரே மறுத்திருந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


