“ஒட்டுமொத்த அணியின் முன்பு மெக்கலமிடம் மன்னிப்புக் கேட்டேன்” - ரகசியம் பகிர்ந்த கம்பீர்
கொல்கத்தா: ஐபிஎல் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட சமயத்தில் சக வீரர் பிரெண்டன் மெக்கலமிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட விஷயத்தை பகிர்ந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்.
இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) கொல்கத்தா இரண்டு முறை டைட்டில் வெல்ல காரணமாக இருந்தவர் இந்திய அணியின் முன்னாள் கவுதம் கம்பீர். 2011 முதல் 2017 வரை அவர் கொல்கத்தா அணியை வழிநடத்தினார். கொல்கத்தா அணியில் இணைந்த இரண்டாவது வருடத்தில் (2012) சென்னை அணியை ஃபைனலில் வீழ்த்தி கொல்கத்தா அணியை வெல்ல வைத்தார் கம்பீர். இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர் பிரெண்டன் மெக்கல்லத்துக்கு பதிலாக பிரட் லீயை தேர்வு செய்திருப்பார் கம்பீர். அப்போது பிரெண்டன் மெக்கல்லம் ஃபார்மில் இருந்தும் பிரட் லீயை தேர்வு செய்த காரணத்தையும், அதற்காக மெக்கல்லத்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதையும் இப்போது வெளிப்படுத்தி இருக்கிறார் கம்பீர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


