ரோகித் சர்மாவை சொல்லி வைத்துத் தூக்கிய ஷோயப் பஷீர் - யார் இவர்?
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்து வருகிறது. ஜெய்ஸ்வால் அற்புதமான அதிரடி சதத்தை எடுத்து ஆடி வருகிறார். இவருடன் அறிமுக வீரர் ரஜத் படிதார் இறங்கி ஆடி வருகிறார். முன்னதாக இங்கிலாந்து அணியில் புதிய ஆஃப் ஸ்பின்னர் சேர்க்கபட்டுள்ளார். அவர் பெயர் ஷோயப் பஷீர், வயது 20. அவர் ரோகித் சர்மா விக்கெட்டை சொல்லி வைத்து வீழ்த்தினார்.
யார் இவர்?: ஜாக் லீச் காயமடைந்ததால் அவர் இடத்தில் ஷோயப் பஷீர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆறு அடிக்கும் மேல் உயரம் கொண்டவர். பந்தை அந்த உயரத்திலிருந்து சுழலுக்கு இறக்குகிறார். ரோகித் சர்மா 41 பந்துகளில் 14 ரன்களை (ஒரு பவுண்டரிகூட இல்லை) எடுத்து பஷீர் பந்தில் ஆட்டமிழந்தார். சரியாக லெக் ஸ்லிப்பைக் கொண்டு வந்து நிறுத்தி ஒரு பந்தை லெக் அண்ட் மிடிலில் பிட்ச் செய்து லேசாகத் திருப்ப ரோகித் சர்மா பிளிக் ஆட முயன்று லெக் ஸ்லிப்பில் நின்ற போப் கையில் கேட்சாக ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை திட்டமிட்டு சரியாக செயல்படுத்தி இருந்தார் ஷோயப் பஷீர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


