34 பவுண்டரிகள், 26 சிக்சர்கள்... - 147 பந்துகளில் முச்சதம் விளாசி வரலாறு படைத்த தன்மய் அகர்வால்

செகந்தராபாத்: ரஞ்சி கோப்பை போட்டியில் அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக 147 பந்துகளில் முச்சதம் விளாசி வரலாறு படைத்தார் ஹைதராபாத் பேட்டர் தன்மய அகர்வால். மொத்தத்தில் அவர் 181 பந்துகள் ஆடி 34 பவுண்டரிகள் 26 சிக்சர்களுடன் 366 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோருக்கான ரஞ்சி சாதனையான 442 ரன்களை அவர் உடைப்பார் என்று எதிர்பார்த்தது இயலாமல் போனது.

செகந்தராபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் சக தொடக்க வீரர் ராகுல் சிங் அவர் பங்கிற்கு 105 பந்துகளில் 26 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 185 ரன்கள் விளாச, தன்மய் அகர்வாலும் இவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்காக சாதனையான 40 ஓவர்களில் 449 ரன்களை அதிரடியாகக் குவித்தனர். தற்போது ஹைதராபாத் அணி 615/4 என்று டிக்ளேர் செய்தது. அருணாச்சலப் பிரதேச அணி தன் முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்குச் சுருண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.