ரஞ்சி கோப்பை: இன்னிங்ஸ், 129 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு வெற்றி!

கோவை: கோவையில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் தமிழ்நாடு - ரயில்வேஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.அதன்படி, சி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு - ரயில்வேஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கோவை  ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்து, முதல் இன்னிங்ஸின் முடிவில், 144 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 489 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கோவை வீரர் ஜெகதீசன் 402 பந்துகளில் 245 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.