150+ பதக்கங்கள்... கராத்தேவில் ஜொலிக்கும் கோவை சிறுமி அஸ்மிதா!

கோவை: நாளுக்கு நாள் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகி வருகிறது. ஆண்களுக்கு நிகரானவர்கள்தான் பெண்கள் என்று கூறப்பட்டு வந்தாலும், உடலளவில் பெண்கள் மென்மையானவர்கள்தான். அவர்கள் அப்படிதான் படைக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, ஒவ்வொரு பெண்ணும் தன்னை தற்காத்துக் கொள்ளும் துணிவை, ஏதேனும் ஒரு தற்காப்புக் கலையை கற்பதன் மூலமாக பெற முடியும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்காத சூழலும், பாதுகாப்பு நடவடிக்கையில் தொடர்ந்து தொய்வும் நிலவும் சூழ்நிலையில், பெண்கள் பாதுகாப்பு என்ற தலைப்பில் பாரதியார் குறிப்பிட்ட 'எனதுரிமை, எனதுயிர், என் வாழ்வு என வெகுண்டெழு! ரௌத்திரம் பழகு! என்ற வரிக்கேற்ப, சமீப காலங்களாக தங்களை தற்காத்துக்கொள்ளும் வலிமை படைத்தவர்களாக மாறி வருகிறார்கள் பெரும்பாலான பெண்கள். தற்காப்பு கலை பயிற்சி பெறுபவருக்கு முழு தசை மண்டலமும் ஒருங்கிணைந்து செயல்பட தூண்டப்படுவதுடன், தம் மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்துகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.