தோனியிடம் கற்றுக்கொண்டதை களத்தில் செயல்படுத்துகிறேன்: மனம் திறக்கும் ஷிவம் துபே
மொகாலி: தோனியிடம் கற்றுக்கொண்டதை களத்தில்செயல்படுத்துகிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிவம் துபே கூறினார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் மொகாலியில் நடைபெற்ற முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் 158ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 15 பந்தகளை மீதம் வைத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆல்ரவுண்டரான ஷிவம் துபே 40 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 60ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார். பந்து வீச்சிலும் 2 ஓவர்களை வீசி 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


