தங்கச் சங்கிலியை விற்ற தாய், ரூ.800 கடன் வாங்கிய தந்தை - இந்திய அணிக்கு தேர்வான துருவ் ஜுரல் கிரிக்கெட் பயணம்!
லக்னோ: இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இளம் வீரர் துருவ் ஜுரல் தனது பெற்றோர்கள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இந்திய அணி சுழற்பந்து வீச்சை அதிகம் நம்பி களம் காண உள்ளது. அஸ்வின், ஜடேஜா, அக்சர் மற்றும் குல்தீப் என நான்கு பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் அங்கம் வகிக்கின்றனர். அதேநேரம், முகமது ஷமி, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷனுக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இளம் வீரர் துருவ் ஜுரல் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் முதல் முறையாக வாய்ப்பு பெற்றுள்ளார். 22 வயதான இவர், கடந்த ஆண்டு டிசம்பரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடிய இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருந்தார். இதில் இரண்டாவது போட்டியில் விளையாடிய துருவ் ஜுரல் 69 ரன்களை எடுத்தார். சமீபத்தில் ஆலப்புழாவில் நடந்த ரஞ்சி டிராபி ஆட்டத்தில் கேரளாவுக்கு எதிராக 63 ரன்கள் எடுத்தார். கடந்த ஆண்டு விதர்பாவுக்கு எதிராக முதல்தர போட்டியில் அறிமுகமான துருவ் ஜூரல், இதுவரை 15 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்களுடன் 790 ரன்கள் எடுத்துள்ளார். இந்த நிலையில், இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


