16 சிக்சர்களுடன் பாகிஸ்தான் பவுலிங்கை புரட்டி எடுத்த ஃபின் ஆலன்: டி20 தொடரை வென்றது நியூசிலாந்து
ஷாஹின் ஷா அஃப்ரிடியின் முதல் கேப்டன்சி தொடரே பாகிஸ்தானின் தொடர் சொதப்பல் தோல்வியில் முடிந்துள்ளது. டியுனெடின் மைதானத்தில் இன்று நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் நியூஸிலாந்து வீரர் ஃபின் ஆலன் 62 பந்துகளில் 5 பவுண்டரிகள் 16 சிக்சர்களுடன் 137 ரன்கள் விளாசித்தள்ள 20 ஓவர்களில் நியூஸிலாந்து 3வது முறையாக இதே தொடரில் 200 ரன்களைக் கடந்து 224 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்து தோல்வி அடைந்ததோடு தொடரையும் 3-0 என்று இழந்துள்ளது.
ஷாஹின் அஃப்ரிடி டாஸ் வென்று முதலில் நியூஸிலாந்தை பேட் செய்ய அழைத்து பெரும் தவறு செய்தார். ஃபின் ஆலன் அடித்தால் பந்து மைதானத்திற்கு வெளியேதான் செல்கிறது. பாக். வீரர்கள் அண்ணாந்து பார்த்துப் பார்த்து கழுத்து வலி கண்டிருப்பர். மைதானத்தில் ஓடிய ஓட்டத்தை ரோடில் ஓடியிருந்தால் அவர்கள் பாகிஸ்தானுக்கே கூட வந்திருக்கலாம். அந்த ஒரு அடி ஃபின் ஆலனுடையது என்றால் மிகையாக இருந்தாலும் நிஜம்தான்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

