“ரோகித் 2-வது சூப்பர் ஓவரில் ஆடியிருக்கக் கூடாது” - பார்த்திவ் படேல் குறிப்பிடும் ‘விதி’
பெங்களூரு: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரண்டு சூப்பர் ஓவர்களில் விளையாடி வெற்றி பெற்றது. இதில் முதல் சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் தானாக வெளியேறி இருந்தார் இந்திய கேப்டன் ரோகித் சர்மா. ஆனால், அவர் இரண்டாவது சூப்பர் ஓவரில் மீண்டும் பேட் செய்திருந்தார். அது சரியா, தவறா என்ற விவாதம் எழுந்துள்ளது.
இந்தச் சூழலில் அது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பார்த்திவ் படேல். “முதல் சூப்பர் ஓவரை பார்க்கையில் ரோகித் சர்மா ரிட்டையர் அவுட் முறையில் வெளியேறினார் என்று தெரிகிறது. அவர் ரிட்டையர் ஹெர்ட் முறையில் வெளியேறவில்லை. அதனால் அவர் 2-வது சூப்பர் ஓவரில் பேட் செய்திருக்க கூடாது. அதனை போட்டியின் நடுவர்கள் மிஸ் செய்துவிட்டனர் என நான் கருதுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

