பிரணாய், லக்ஷயா அதிர்ச்சித் தோல்வி
கோலாலம்பூர்: மலேசியாவில் நடைபெறும் சர்வதேச ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பிரதான வீரர்களான ஹெச்.எஸ்.பிரணாய், லக்ஷயா சென் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில், போட்டித்தரவரிசையில் 8}ஆம் இடத்திலிருந்த பிரணாய் 14}21, 11}21 என்ற கேம்களில் டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆன்டன்சனிடம் வெற்றியை இழந்தார். இந்த ஆட்டம் 43 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. லக்ஷயா சென் 15}21, 16}21 என்ற கணக்கில் சீனாவின் வெங் ஹாங் யாங்கிடம் தோல்வி கண்டார். இந்த ஆட்டத்தை 49 நிமிஷங்களில் நிறைவு செய்தார் ஹாங் யாங்.
எனினும், ஆடவர் இரட்டையரில் போட்டித்தரவரிசையில் 2}ஆம் இடத்திலிருக்கும் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி கூட்டணி முதல் சுற்றில் 21}18, 21}19 என்ற கேம்களில் இந்தோனேசியாவின் முகமது ஷோஹிபுல் ஃபிக்ரி/பகஸ் மெளலானா இணையை சாய்த்தனர். இந்த ஆட்டம் 44 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

