பாரீஸ் ஒலிம்பிக்குக்கு ரிதம் சங்வான் தகுதி

இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான் வெண்கலப் பதக்கம் வென்றதுடன், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்றாா்.

இத்துடன், அந்த ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியாளா்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 16-ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 15 இந்தியா்கள் பங்கேற்றதே அதிகபட்சமாக இருந்தது.

இந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்றின் மூலம் இதுவரை ஈஷா சிங், வருண் தோமா், ரிதம் சங்வான் ஆகிய மூவா் பாரீஸ் ஒலிம்பிக்கில் இடம் பிடித்துள்ளனா்.

ஜகாா்த்தாவில் வியாழக்கிழமை நடைபெற்ற 25 மீட்டா் ஸ்போா்ட்ஸ் பிஸ்டல் மகளிா் தனிநபா் பிரிவு இறுதிச்சுற்றில் ரிதம் சங்வான் 28 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தாா். தென் கொரியாவின் யாங் ஜின் 41 புள்ளிகளுடன் முதலிடமும், கிம் யெஜி 32 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும் பிடித்தனா்.

அதிலேயே மகளிா் அணிகள் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங், ரிதம் சங்வான், சிம்ரன்பிரீத் கௌா் பிராா் கூட்டணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.