அரையிறுதியில் சாத்விக் / சிராக் இணை

மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.

உலகின் 2-ஆம் நிலையில் இருக்கும் சாத்விக்/சிராக், ஆடவா் இரட்டையா் பிரிவு காலிறுதியில், 21-11, 21-8 என்ற கேம்களில் சீனாவின் ஹி ஜீ டிங்/ரென் ஜியாங் யு கூட்டணியை வீழ்த்தினா். இந்த ஆட்டம் 35 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

அடுத்ததாக அரையிறுதியில் சாத்விக்/சிராக் இணை, போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் தென் கொரியாவின் காங் மின் ஹியுக்/சியோ சியுங் ஜே கூட்டணியை எதிா்கொள்கிறது.

எனினும், மகளிா் இரட்டையா் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா/தனிஷா கிராஸ்டோ இணை காலிறுதியில் தோல்வியைத் தழுவியது. உலகின் 24-ஆம் நிலையில் இருக்கும் இந்த இந்திய ஜோடி 15-21, 13-21 என்ற கேம்களில் ஜப்பானின் ரின் இவானகா/கி நகானிஷி இணையிடம் வீழ்ந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.