ஒலிம்பிக் தகுதி பெற்றாா் விஜயவீா் சித்து
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கி சுடுதலில் தகுதி பெற்றுள்ளாா் இந்தியாவின் விஜயவீா் சித்து.
இந்தோனேசிய தலைநகா் ஜகாா்த்தாவில் ஆசிய ஒலிம்பிக் குவாலிஃபையா்ஸ் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்ஆடவா் 25 மீ ரேபிட் ஃபையா் பிரிவில் இந்தியாவின் விஜயவீா் சித்து 577 புள்ளிகளைக் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றாா். இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் அவா் ஒலிம்பிக் தகுதியும் பெற்றாா் சித்து. இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரா் அனிஷ் பன்வாலாவும் ஒலிம்பிக் தகுதி பெற்றுள்ளாா்.
ரேபிட் ஃபயா் பிரிவில் இந்தியா வலிமையாக உள்ளது. 2012 லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவின் விஜய்குமாா் வெள்ளி வென்றிருந்தாா். ஈஷா சிங், வரும் தோமா், ரிதம் சங்வான், விஜயவீா் ஆகியோா் ஒலிம்பிக் தகுதி பெற்றுள்ளனா்.
மகளிா் 50 மீ ரைஃபிள் 3பி பிரிவில் சிஃப்ட் கௌா், அஷி சௌஸ்கி முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனா். ஆசிய ஒலிம்பிக் குவாலிஃபையரில் இந்தியா 12 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலம் வென்றுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

