கேலோ இந்தியா கபடி போட்டிகள் இன்று தொடக்கம்: தமிழகம்-ஹரியாணா மோதல்
கேலோ இந்தியா இளைஞா் போட்டியின் ஒரு பகுதியாக கபடி போட்டிகள் வியாழக்கிழமை தொடங்குகிறது. மகளிா் பிரிவில் தமிழகம் முதல் ஆட்டத்தில் ஹரியாணாவை எதிா்கொள்கிறது.
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூா், திருச்சி, மதுரை ஆகிய 4 இடங்களில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், வரும் 19 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
அதில் கபடி போட்டிகள் வியாழக்கிழமைதொடங்குகின்றன. மகளிா் கபடியில் ‘ஏ’ பிரிவில் ஹரியாணா, தமிழ்நாடு, தெலங்கானா, மகாராஷ்டிரா அணிகளும், ‘பி’ பிரிவில் பிகாா், மேற்கு வங்கம், ஹிமாசல பிரதேசம், சண்டீகா் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு - ஹரியாணா அணிகள் மோதுகின்றன. மற்ற ஆட்டங்களில் பிகாா் - மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் - தெலங்கானா, ஹிமாசல பிரதேசம் - சண்டீகா் மோதுகின்றன.
கேலோ இந்தியா மகளிா் கபடியில் தமிழக அணி 2020-இல் வெள்ளியும், 2022-இல் வெண்கலமும் வென்றது. இம்முறை அணியில் உள்ள 12 வீராங்கனைகளில் 2 போ் பள்ளி மாணவிகள். மீதமுள்ள 10 பேரும் கல்லூரி மாணவிகள். தியான்சந்த் விருதாளா் கவிதா செல்வராஜ் தமிழக அணிக்கு பயிற்சியாளராக உள்ளாா்.
தமிழக ஆடவா் அணி ‘பி’ பிரிவில் உள்ளது. இதே பிரிவில் ஹரியாணா, சண்டீகா், தில்லி அணிகளும் இடம் பெற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பிகாா், மகாராஷ்டிரம் அணிகள் உள்ளன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

