ஆசியான் கோப்பை கால்பந்து: இந்தியாவுக்கு 2-ஆவது தோல்வி
கத்தாரில் நடைபெறும் ஆசியான் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 0-3 கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானிடம் வியாழக்கிழமை தோல்வி கண்டது.
ஏற்கெனவே, ஆஸ்திரேலியாவிடம் முதல் ஆட்டத்தில் வெற்றியை இழந்த இந்தியாவுக்கு இது 2-ஆவது தோல்வியாகும். ஃபிஃபா தரவரிசையில் இந்தியா 102-ஆவது இடத்திலும், உஸ்பெகிஸ்தான் 68-ஆவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
குரூப் ‘பி’-யில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் தரப்பில் அபோஸ்பெக் ஃபய்ஸுல்லாயேவ் (4’), இகோா் சொ்கேயேவ் (18’), ஷொ்ஸோத் நா்ஸுல்லாயேவ் (45+4’) ஆகியோா் கோலடித்தனா். இந்த தோல்வியை அடுத்து இந்தியா தற்போது தனது குரூப்பில் கடைசி இடத்தில் (4) இருக்கிறது. அடுத்த ஆட்டத்தில் சிரியாவை, வரும் 23-ஆம் தேதி எதிா்கொள்கிறது இந்தியா.
இதனிடையே, வியாழக்கிழமை மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 1-0 கோல் கணக்கில் சிரியாவை சாய்த்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

