“டெஸ்ட் கிரிக்கெட்டே சவால் மிகுந்தது!” - ரோகித் பேச்சும், தெ.ஆ. கிரிக்கெட் வாரிய செயலும்

கேப்டவுன்: "என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டே சவால் மிகுந்தது" என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. போட்டிக்கு தொடங்குவதற்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து விரிவாக பேசினார். ரோகித் பேசுகையில், "நான் நேர்மையாக சொல்கிறேன், என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டே சவால் மிகுந்தது. டெஸ்ட் கிரிக்கெட் பார்மெட்டில்தான் சிறந்த வீரர்கள் விளையாடுவதை பார்க்க முடியும். ஆனால், ஒவ்வொருவருக்கும் அவரவர் பிரச்சினைகள் உள்ளன. தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து எனக்கு தெரியாது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.