ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவதற்கு மல்யுத்த போட்டிகளை தொடங்க வேண்டும்: பஜ்ரங் பூனியா கோரிக்கை

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளதால் இந்திய மல்யுத்த நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய மல்யுத்த சங்கத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் நடத்திய போராட்டங்களை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மல்யுத்த நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன. மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக சஞ்ஜய் சிங் தேர்வான நிலையில், அவர் விதி முறைகளை மீறியதாக கூறி ஒட்டு மொத்த சம்மேளனத்தையும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சஸ்பெண்ட் செய்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.