அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற முதல் பெண்மணி 1952 ஜூலையில் காலமானார். அதற்கு 60 ஆண்டுகள் கழித்து அவருடைய உடல் விநோதமான முறையில் காணாமல் போனது பற்றியும் உலகைச் சுற்றிய அதன் 16 ஆண்டுகால பயணம் பற்றியும் பிபிசி மறுபதிவு செய்தது.
எலும்பு அடர்த்தி நாம் நினைப்பதை விட முன்னதாகவே குறையத் தொடங்குகிறது. ஆனால், நமது உணவில் சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதை உறுதி செய்வதன் மூலம் நமது எலும்புக்கூட்டை வலுவாக வைத்திருக்க முடியும்.
நல்ல வருமானம் இருந்ததோடு, அவர்கள் கடைப்பிடித்த தீவிர சேமிப்பு பழக்கங்கள் முன்கூட்டியே ஓய்வுபெற உதவின. மேலும், தங்களால் இயன்ற அளவு பணத்தை முதலீடுகளிலும் செலுத்தினர்.
கோவை, மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, மத்திய அரசின் நிதி மற்றும் ஒப்புதல் கோரி அனுப்பிய விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளது. இவ்விரு நகரங்களிலும் உள்ள மக்களிடம் இவை பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பேசுபொருளாகவும் உள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் மற்றும் அழகர்கோவிலுக்குச் சொந்தமான சுமார் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.79 ஏக்கர் அறக்கட்டளை நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்து, பத்திரப்பதிவு மற்றும் அடமானம் செய்ததாக 19 பேர் மீது மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
ஸ்பெயின் அணியைச் சேர்ந்த கால்பந்து வீரர் குகுரெல்லாவின் மகன் மேட்டியோவுக்கு மூன்று வயதில் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (Autism Spectrum Disorder - ASD) ஸ்டேஜ் 1 இருப்பது கண்டறியப்பட்டது.
டெல்லியின் ஜந்தர் மந்தரில் 37 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இளைஞர்களின் போராட்டம், பிரதமர் நரேந்திர மோதியின் அரசியல் செல்வாக்குக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்தின் அழுத்தத்தால் கல்வி அமைச்சர் பதவி விலக நேரிட்டது
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பல்வேறு தரப்புகளில் இருந்து குரல்கள் எழுந்து வருகின்றன. அரிசியின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாமல் போனதும் அண்டை மாநிலங்களாக கேரளா மற்றும் கர்நாடகாவிலிருந்து வரத்து குறைந்ததுமே இதற்கு காரணம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
பிகாரில் மாணவர்கள் போராட்டத்தின் போது காவலர் ஒருவர் ஏகே-47 துப்பாக்கியை நீட்டி சுட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அது தொடர்பாக பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளிடையே காரசாரமான அரசியல் விவாதம் எழுந்துள்ளது.