ட்ரம்ப் கையெழுத்து Done; ரஷ்ய எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது 100% வரி விதிக்கும் ரூட் Clear?

‘ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குபவர்கள் எல்லாம் ரஷ்யா-உக்ரைன் போருக்கு நிதி அளிக்கின்றனர்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.

ரஷ்யா மீது பல பொருளாதார தடைகள் விதித்து நெருக்கடி கொடுத்தது அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும். ஆனால், ரஷ்யா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி மூலம் மற்ற பொருளாதார தடைகளைச் சமாளித்து விடுகிறது.

இதற்குச் செக் வைக்கத்தான் அமெரிக்கா இப்போது ‘ரஷ்யா தடைகள் சட்டத்தை’ கொண்டுவந்துள்ளது. இந்தத் தடை சட்டம் ரஷ்யாவிற்கு மட்டுமல்ல... ஈரானுக்கும்தான்.

புதின் - ட்ரம்ப்

என்ன சொல்கிறது இந்தச் சட்டம்?

இந்தச் சட்டத்தின் மூலம், ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகம் செய்யும் நாடுகள், அமெரிக்காவிற்கு ஏதேனும் ஏற்றுமதி செய்தால், அதற்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும்.

இந்தச் சட்டத்தை முதன்முதலில் ட்ரம்பிற்கு நெருக்கமான லிண்ட்சி ஓ. கிரஹாம் பரிந்துரைத்தார். அவர் காலமாகிவிட்டார். இதனால், அவர் நினைவாக, இந்தச் சட்டத்திற்கு அவருடைய பெயரே வைக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் போட்ட கையெழுத்து

இந்தச் சட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவின் மேல்சபையான செனட்டில் 86-11 என ஒப்புதல் பெற்றது. இந்த வாரம் கீழ்சபையில் 262-159 வாக்குகள் என ஒப்புதல் பெற்றுள்ளது.

அடுத்ததாக, இது அமெரிக்க அதிபர் கையெழுத்திற்காகத்தான் காத்திருந்தது. அந்தக் கையெழுத்தையும் நேற்று (செப்டம்பர் 18) ட்ரம்ப் போட்டுவிட்டார்.

அதிபர் கையெழுத்திட்ட 30 நாள்களுக்குள் இந்தச் சட்டம் அமலுக்கு வரும்.

எந்த நாடுகள் பாதிக்கும்?

இந்தச் சட்டம் ரஷ்யா இயற்கை எரிவாயுவை 15 சதவீதத்திற்கும் குறைவாக இறக்குமதி செய்யும் நாடுகள், ரஷ்ய இறக்குமதியைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வரும் நாடுகள் மீது பாயாது.

ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யும் டாப் ஐந்து நாடுகள் சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.