Tata Sons: `தலைவராகத் தொடரும் சந்திரசேகரன்! - டாடா சன்ஸ் அறிவிப்பு

63 வயதாகும் சந்திரசேகரன், டாடா குழுமத்தில் 40 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.

10 ஆண்டுக்காலமாக இந்நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். இவரது பதவிக்காலம் 2027 பிப்ரவரி 20 அன்று முடிவடைய இருக்கிறது.

ஆனால் இந்தப் பதவியில் தொடர விரும்பவில்லை என கடந்த சில நாள்களுக்கு முன் சந்திரசேகரன் அறிவித்திருந்தார்.

சந்திரசேகரன் - ரத்தன் டாடா

இதனையடுத்து புதிய தலைவரை தேடும் பணியில் டாடா சன்ஸ் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அடுத்த 5 ஆண்டுகள் அவர் இந்தப் பதவியில் தொடர்வதற்கு மும்பையில் நடந்த டாடா சன்ஸ் வாரியக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கும் (IPO) இந்த வாரியக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.