`மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி - உதயமானது தவெக தலைமையிலான புதிய கூட்டணி!
இன்று (செப்டம்பர் 9) பனையூரில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.
இந்தக் கூட்டத்திற்கான அழைப்பு தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்த கட்சிகளுக்கு விடுக்கப்பட்டது. அவை - காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.
தவெக, மதிமுக
வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் உதய சூரியனில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததால், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க முடியாத நிலை.
ஆனால், தற்போது வைகோ திமுகக் கூட்டணியில் இருந்து விலகித் தவெகக் கூட்டணியில் இணைந்துவிட்டார். இதனால், மதிமுகவிற்கும் இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
கம்யூனிஸ்ட் நிலைப்பாடு
ஆரம்பத்திலிருந்தே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ‘ஆட்சி அமைக்க மட்டுமே ஆதரவு, கூட்டணி இல்லை’ என்பதில் தெளிவாக உள்ளது.
இதையொட்டி, இந்த இரு கட்சிகளும் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
இதனால், இந்த இரு கட்சிகளைத் தவிர்த்து, அழைப்பு விடுக்கப்பட்ட மற்ற அனைத்துக் கட்சிகளும் கலந்துகொண்டன.

புதிய பெயர்
தவெக, காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக், மதிமுக ஆகிய கட்சிகளின் கூட்டணிக்கு இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
தவெக தவிர்த்து, முன்பு திமுகவில் இந்தக் கட்சிகள் கூட்டணியில் இருந்தபோது, அந்தக் கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ என்று பெயர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


