வரலட்சுமி நோன்பு அன்று உயர்ந்த தங்கத்தின் விலை!.. இன்றைய நிலவரம்..


சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது. கடந்த பல நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.

நேற்று தங்கத்தின் விலை உயர்ந்து சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,16,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், கணவனுக்காக பெண்கள் வரலட்சுமி நோன்பு இருக்கும் இன்று தங்கத்தின் விலைம் மேலும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் 14,710-க்கும், சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,17,680-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியை பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.265-க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் அதிகரித்து 2.65,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.