17 வயதில் ரூ.3.55 கோடி உதவித்தொகை! Brown பல்கலையில் சேரும் ஈரோடு மாணவர் பிரணவ்
தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்த 17 வயது மாணவர் பிரணவ் இளங்கோ, அமெரிக்காவின் புகழ்பெற்ற Brown பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பைத் தொடர ரூ.3.55 கோடி மதிப்பிலான முழு உதவித்தொகையைப் பெற்றுள்ளார்.
CS Academy, Erode பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து வரும் பிரணவ், அமெரிக்காவின் புகழ்பெற்ற Brown University-யில் Public Health மற்றும் Applied Mathematics துறைகளில் தனது உயர்கல்வியைத் தொடரவுள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கான அவரது கல்விக் காலத்தில் கல்விக் கட்டணம் மற்றும் வாழ்வாதாரச் செலவுகளை உள்ளடக்கும் வகையில் இந்த உதவித்தொகை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கணிதம், தொழில்நுட்பம் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி சிக்கலான பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அதற்கான தீர்வுகளை உருவாக்குவதில் பிரணவ் ஆர்வம் கொண்டுள்ளார். குறிப்பாக, தரவுகளின் அடிப்படையில் பொது சுகாதாரத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவரது எதிர்கால நோக்கமாகும்.
பிரணவின் LinkedIn அறிமுகத்தின்படி, பொறியியல் மற்றும் வணிகத் துறைகளின் இணைவில் உருவாகும் வாய்ப்புகள் மீது அவர் ஆர்வம் கொண்டவர். அத்தோடு மென்பொருள் உருவாக்குதல், நிறுவனங்களை கட்டமைத்தல் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் ஆகியவற்றிலும் அவர் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
17 வயதிலேயே உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றில் முழு உதவித்தொகையுடன் கல்வி பயிலும் வாய்ப்பை பிரணவ் இளங்கோ பெற்றிருப்பது, ஈரோட்டை மட்டுமல்லாமல் தமிழக மாணவர்களுக்கும், உயர்கல்விக்காக காத்திருக்கும் அனைவருக்கும் பெருமைக்குரியதாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

