TN Budget: 5 ஆண்டுகள் முடியும்போது ஒட்டுமொத்த கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்- தங்கம் தென்னரசு

தவெக அரசு 2026 - 2027 ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில், முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது அவர், "தவெக அரசின் நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. தவெக-வின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை.

தமிழ்நாடு பட்ஜெட்

நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை தொடர்பாக நான் அப்போது தந்த விளக்கம் இப்போதும் சரியாக உள்ளது. அரசின் கடன் உயரும் என்று கூறினேன். நிதித் துறை செயலர் தனது விளக்கத்திலும் அதையே கூறியிருக்கிறார்.

தவெக அரசு 3 மாதங்களில் ரூ.22,000 கோடியை கடனாக வாங்கிய நிலையில், 5 ஆண்டுகள் முடியும்போது ஒட்டுமொத்த கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.

திமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களுக்கு இன்று முலாம் பூசப்பட்டு வேறு பெயரில் கொண்டு வரப்பட்டு இருக்கிறதே ஒழிய, அதற்கான உரிய நிதியைக்கூட பெருமளவில் விடுவிக்கவில்லை.

தவெக அரசின் முதல் பட்ஜெட்
தவெக அரசின் முதல் பட்ஜெட்

தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை பொய்த்துப் போகச் செய்துள்ளது. தவெக-வின் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இடம் பெறவில்லை. திமுக அரசு என்ன தந்ததோ அதையேதான் தவெக, பட்ஜெட்டில் தந்திருக்கிறது" என்று சாடியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.