All Party Meet: விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதே அரசியலை விட முக்கியம்! - டி.கே. சிவக்குமார்

காவிரி நீர் பகிர்வு விவகாரம் குறித்து விவாதிப்பதற்காகக் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையில் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், "மாநிலத்தின் நலன் மற்றும் விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதே அரசியலை விட மிகவும் முக்கியமானது.

Karnataka All Party Meet

மாநிலத்தின் நலன் சார்ந்த பிரச்னைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்பதுதான் கர்நாடகாவின் பாரம்பரியம்.

எப்போதுமே குடிநீர் தேவைகளுக்கு முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்பதே நமது அரசின் உறுதியான நிலைப்பாடு. இந்த முடிவில் நீங்கள் அனைவரும் என்னோடு முழுமையாக உடன்படுவீர்கள் என்று நம்புகிறேன்." எனக் கூறியிருக்கிறார்.

மேலும், காவிரி நீர் ஒழுங்குமுறைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகள் குறித்தும், மத்திய அமைச்சர்கள் சி.ஆர். பாட்டீல், பிரகலாத் ஜோஷி, வி. சோமண்ணா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைகள் பற்றியும் கூட்டத்தில் டி.கே. சிவகுமார் விளக்கியிருக்கிறார்.

DK Shivakumar - Karnataka All Party Meet
DK Shivakumar - Karnataka All Party Meet

2.5 மணி நேரம் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள் வீரப்ப மொய்லி, சித்தராமையா, பி.எஸ். எடியூரப்பா, எச்.டி. குமாரசாமி, டி.வி. சதானந்த கௌடா, பசவராஜ் பொம்மை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா உட்படப் பல முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.