7,000 மாணவர்களுக்கு HIV தொற்று; கர்நாடகாவில் அதிர்ச்சி... கல்லூரிகளில் பரிசோதனைக்கு உத்தரவிட்ட அரசு!
கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 7,000-க்கும் மேற்பட்டோருக்கு ஹெச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் ஹெச்.ஐ.வி பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்களை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய அதிகாரபூர்வ தரவுகளின்படி, 7,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் இந்தத் தொற்று வேகமாகப் பரவி வருவது பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் கர்நாடகா 3-வது இடத்தில் உள்ளது. 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களுக்கே ஹெச்.ஐ.வி தொற்று மிக வேகமாக உயர்ந்து வருகிறது என KSAPS தரவுகள் சொல்கின்றன.
சமீபத்தில் 18-25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று இருப்பது உறுதியானதால், கல்லூரி வளாகங்களிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கல்லூரிகளில் விழிப்புணர்வு, ஆலோசனை மற்றும் ஹெச்.ஐ.வி பரிசோதனை முகாம்களை ஏற்பாடு செய்வது நிறுவனங்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும், மாணவர்கள் தங்களின் சம்மதத்தைத் தந்தால் மட்டுமே பரிசோதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்வதை ஊக்குவிப்பது மற்றும் தொற்று உள்ளவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதே இதன் முதன்மை நோக்கம் என அரசு கூறியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

