Kayal Actress Subashini : கயல் சீரியல் நடிகை சுபாஷினி தற்கொலை – ஐயப்பந்தாங்கலில் நடந்த சோகம்!
சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான கயல் சீரியல் நடிகை சுபாஷினி பாலசுப்ரமணியம், சென்னை ஐயப்பந்தாங்கலில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த சின்னத்திரை வட்டாரத்தையும் உலுக்கியுள்ளது. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வந்தார்.
இன்று அதிகாலை நடந்த இந்த விபரீத முடிவுக்குக் குடும்பத் தகராறு தான் முக்கிய காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது கணவர் பிபின் சந்திராவுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த போதே இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அந்த ஆத்திரத்தில் சுபாஷினி இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது சுபாஷினியின் செல்போனை கைப்பற்றியுள்ள போலீஸார், தற்கொலைக்கு முன்னதாக அவர் யாருக்காவது மெசேஜ் அனுப்பினாரா அல்லது வேறு ஏதேனும் அழுத்தம் இருந்ததா என்பது குறித்துத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கயல் சீரியலில் இவருடன் நடித்த சக நடிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
சுபாஷினியின் இந்தத் திடீர் முடிவு அவரது ரசிகர்களையும், சக கலைஞர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பு : தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை உணராமல் இளம் கலைஞர்கள் இப்படி உயிரை விடுவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


