Trump: ஈரானின் புதிய அதிபர் போர் நிறுத்தத்தைக் கேட்கிறார்; ஆனால், அதற்கு... - ட்ரம்ப் பதிவு

இன்னும் 2 - 3 வாரங்களில் ஈரான் போர் நிறைவு பெற்றுவிடும் என்று நேற்று ஹின்ட் கொடுத்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இதைத் தொடர்ந்து, போர் நிறுத்தம் குறித்து இப்போதும் ஒரு தகவலைத் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.

அதில்...

"ஈரானின் புதிய அதிபர் அமெரிக்காவிடம் போர் நிறுத்தத்தைக் கேட்டுள்ளார். இவர் தனக்கு முன் ஆட்சியில் இருந்தவர்களை விட, மிகக் குறைந்த தீவிரப்போக்கு கொண்டவர் மற்றும் அதிக புத்திசாலி ஆவார்.

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு, அங்கே தடையின்றி, சீராக அனைத்தும் நடக்கும்போது, போர் நிறுத்தத்தைப் பற்றி சிந்திப்போம்.

ட்ரம்ப் பதிவு

அதுவரை ஈரானைக் கடுமையாகத் தாக்குவோம்... அவர்கள் சொல்வதுப்போல, கற்காலத்திற்குள் தள்ளுவோம்".

ட்ரம்ப், ஈரானின் புதிய ஆட்சியாளர்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறோம்..., பேச்சுவார்த்தை நன்றாகச் சென்றுக்கொண்டிருக்கிறது..., அதோ..., இதோ... என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.

ஆனால், இதை ஈரான் முற்றிலும் மறுக்கிறது.

ட்ரம்பும், அவரது அதிகாரிகளும் ஈரானில் இருக்கும் யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.