வருமான வரி, பங்குச்சந்தை: இன்று முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன?

இன்று (ஏப்ரல் 1) முதல் பல்வேறு நிதி மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.

அவற்றில் வருமான வரி மற்றும் பங்குச்சந்தையில் நடக்க உள்ள மாற்றத்தைப் பார்க்கலாம்.

> இதுவரை வருமான வரிச் சட்டம், 1961 அமலில் இருந்தது. இன்று முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலாகிறது.

இந்தச் சட்டம் குறித்து இந்தக் கட்டுரையில் விளக்கமாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

பங்குச்சந்தை

புதிய வருமான வரிச் சட்டத்திற்குக் கீழ் வரும் அனைத்து விதிகளும் 2027-ம் ஆண்டு நிதியாண்டின் வருமான வரித் தாக்கலில் இருந்து தான் அமலுக்கு வரும்.

> கடந்த நிதியாண்டு வரை, முந்தைய ஆண்டு, மதிப்பீட்டு ஆண்டு என இரண்டு ஆண்டுக் கணக்குகள் இருந்தன. ஆனால், இனி வரி ஆண்டு என்ற ஒன்று மட்டும் தான் வருமான வரித் தாக்கலின் போது இருக்கும்.

> ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் மீதான பங்குச் சந்தை பரிவர்த்தனை வரி (Securities Transaction Tax - STT) 0.02 சதவிகிதத்தில் இருந்து 0.05 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆப்ஷன்களைப் பொறுத்தவரை, பிரீமியங்கள் மீதான இந்த வரி 0.1 சதவிகிதத்தில் இருந்து 0.15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

காண்ட்ராக்ட் முடியும் வரை ஆப்ஷன்களை வைத்திருந்தால், அதற்கான எஸ்.டி.டி வரி 0.125 சதவிகிதத்தில் இருந்து 0.15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.