Mrunal Thakur: அதன் பிறகுதான் அனைவரும் என்னை ஏற்றுக்கொண்டார்கள் - மிருணால் தாகூர்

மிருணால் தாகூர் நடித்திருக்கும் டகாய்ட் (Dacoit) திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் அவரை ஏற்றுக்கொண்ட விதம் பற்றி இப்படத்திற்கான புரோமோஷன் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார்.

Dacoit - Mrunal Thakur

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மிருணால் தாகூர், 2018-ல் லவ் சோனியா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

அதன் பிறகு மூன்று தெலுங்கு படங்களில் நடித்தார். இப்படங்களின் மூலம் பாலிவுட்டைத் தாண்டி மற்ற மொழி சினிமாக்களில் இவர் பெரியளவில் பரிச்சயமானார்.

மற்ற மொழிகளில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், பாலிவுட் இயக்குநர்கள் அவரைப் பல வகையான ரோல்களில் ஏன் காஸ்ட் செய்யவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த மிருணால், "நான் படிப்படியாக ஏணியில் ஏறிக்கொண்டிருக்கிறேன். முன்பு நான் தயாராக இல்லை.

இப்போது முற்றிலும் தயாராக இருக்கிறேன். எனக்காகவே எழுதப்பட்ட ரோல்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

மிருணாள் தாக்கூர் | Mrunal Thakur
மிருணாள் தாக்கூர் | Mrunal Thakur

இயக்குநர்களும் இந்த ஸ்கிரிப்ட்டை உங்களை மனதில் வைத்து எழுதியிருக்கிறேன் எனச் சொல்கிறார்கள். இப்படி சொல்வதெல்லாம் எனக்கு மிகப்பெரிய விருது.

முதல் தெலுங்கு படமான சீதா ராமம் திரைப்படம் பிளாக்பஸ்டராகி, தென்னிந்திய சினிமாவில் எனக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது. அதன் பிறகுதான் அனைவரும் என்னை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வளர்ந்தேன்" எனக் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.